செய்திகள்

மாணவியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்ட வாலிபர் - போலீசார் விசாரணை

Published On 2019-03-09 14:20 GMT   |   Update On 2019-03-09 14:20 GMT
ஊத்தங்கரை அருகே மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி அருகேயுள்ள மேட்டுசூளகரை பகுதியை சேர்ந்தவர் ரஜினி (வயது40). இவர் சந்துக்கடையில் திருட்டுதனமாக மதுவாங்கி விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இவரது மகள் அங்குள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இவளது தோழி அதே பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தாள்.

நேற்று ரஜினி மகள் வீட்டில் அவளது தோழி பேக்கை வைத்து விட்டு சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து தோழி பேக்கை எடுக்க வீட்டிற்கு வந்தார். அப்போது ரஜினி தனது மகள் தோழியிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டார். உடனே அந்த மாணவி சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

அவர்கள் வருவதற்குள் அங்கிருந்து ரஜினி தப்பி ஓடி விட்டார். இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவி கல்லாவி போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
Tags:    

Similar News