செய்திகள்

திருவாரூர் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

Published On 2019-03-02 18:15 GMT   |   Update On 2019-03-02 18:15 GMT
திருவாரூர் அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மகள் கண்முன்னே பரிதாபமாக முதியவர் பலியானார்.
திருவாரூர்:

திருவாரூர் அருகே உள்ள அம்மையப்பன் ஆணைவடபாதி பகுதியை சேர்ந்தவர் தங்கராசு (வயது67). இவர் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில், தனது மகள் செல்வியுடன் திருத்துறைப்பூண்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியது. இதில் படுகாயமடைந்த தங்கராசு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தில் காயமடைந்த செல்வி திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து செல்வி திருவாரூர் தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி மகள் கண் முன்னே முதியவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News