செய்திகள்

கோவை கணபதி பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

Published On 2019-02-25 12:31 GMT   |   Update On 2019-02-25 12:31 GMT
கோவை கணபதி பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
கோவை:

கோவை கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ஜனதா மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் தலைமையில் கோவை கணபதி ஸ்ரீலட்சுமி நகர் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் மற்றும் பெண்கள் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது-

எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை வர இருப்பதாகவும் அதற்கான கட்டிட பணிகள் விரைந்து நடப்பதாகவும் அறிகிறோம். டாஸ்மாக் கடை அமைய உள்ள இடத்தின் அருகில் கோவில்களும், பள்ளிகளும் உள்ள காரணத்தால் இப்பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

கோவை மாவட்ட காதுகேளாதோர் சங்க நிர்வாகிகள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் 40, 50, 60 வயது வரை உள்ளவர்களுக்கும், காது கேளாதோருக்கும் முன்னுரிமை அடிப்படையில் அரசு வேலை வாய்ப்பு அளிக்கவில்லை. நாங்கள் சுமார் 1000 பேர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என கூறி உள்ளனர். #tamilnews
Tags:    

Similar News