செய்திகள்

தொட்டியம் அருகே மொபட்டில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி

Published On 2019-02-22 14:04 GMT   |   Update On 2019-02-22 14:04 GMT
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே மொபட்டில் இருந்து தவறி விழுந்து விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
தொட்டியம்:

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள பாப்பாப்பட்டி மேலக் கொட்டத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 55), விவசாயி. இவர் சம்பவத்தன்று மேலக் கொட்டத்தில் இருந்து பாப்பாப்பட்டி சாலையில் தனது மொபட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு திருப்பத்தில் திரும்பிய போது நிலைதடுமாறி மொபட்டில் இருந்து கீழே விழுந்தார். 

இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே செல்வத்தை சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைகாக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வம்  பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தொட்டியம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News