செய்திகள்

தேனி அருகே சிறுமிக்கு திருமணம்- 5 பேர் மீது வழக்கு

Published On 2019-02-22 12:15 GMT   |   Update On 2019-02-22 12:15 GMT
தேனி அருகே 16வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

தேனி:

தேனி அருகே விஸ்வாசபுரத்தை சேர்ந்தவர் ஆண்டவர். இவரது மகன் ராஜா(வயது26). இவருக்கும் உப்புக்கோட்டையை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

18 வயது பூர்த்தியாகாத சிறுமியை திருமணம் செய்ததாக தேனி குழந்தைநலக்குழு தலைவர் சுரேஷ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி சம்பவ இடத்திற்கு சென்று சுரேஷ்குமார் விசாரணை நடத்தியதில் சிறுமிக்கு திருமணம் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதற்கு இருவீட்டாரும் உடந்தையாக இருந்துள்ளனர். இது குறித்து வீரபாண்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்படி சிறுமியை திருமணம் செய்த ராஜா, அவரது தந்தை ஆண்டவர், தாய் குருவம்மாள் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News