செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு கரன்சிகள்

மதுரை விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் - தூத்துக்குடி வாலிபர் கைது

Published On 2019-02-21 11:07 GMT   |   Update On 2019-02-21 11:07 GMT
விமானம் மூலமாக சிங்கப்பூருக்கு வெளிநாட்டு கரன்சியை கடத்திய தூத்துக்குடி வாலிபரை போலீசார் கைது செய்தனர். #MaduraiAirport
அவனியாபுரம்:

மதுரை விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவை உள்ளது. அண்மைக்காலமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கும், இங்கிருந்து வெளிநாடுகளுக்கும் தங்கம், கரன்சி உள்ளிட்டவை கடத்தப்படுவது அடிக்கடி நடந்து வருகிறது.

இதை தடுக்க விமான நிலைய போலீசார் மற்றும் சுங்க இலாகவினர் தீவிர சோதனை செய்த பிறகே பயணிகள் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படுகின்றனர்.

மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு விமானம் புறப்பட தயாரானது. பயணம் செய்யும் பயணிகளின் உடமைகளை மத்திய சுங்க இலாகா நுண்ணறிவு உதவி ஆணையர் வெங்கடேஷ் மற்றும் அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர்.

சிங்கப்பூர் செல்ல இருந்த தூத்துக்குடி மாவட்டம், நாராயணன் தெருவைச் சேர்ந்த பார்வதிநாதன் (வயது 46) என்பவரின் பையும் சோதனை செய்யப்பட்டது.

அந்த பையில் யூரோ, சிங்கப்பூர் டாலர், புருனே, மலேசியா நாட்டு கரன்சிகள் கட்டுக்கட்டாக இருந்தன. இதன் இந்திய மதிப்பு ரூ.44 லட்சம் ஆகும்.

இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் பார்வதிநாதனை பிடித்து பெருங்குடி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்வதிநாதனை கைது செய்தனர். #MaduraiAirport
Tags:    

Similar News