செய்திகள்

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம்

Published On 2019-02-20 16:13 GMT   |   Update On 2019-02-20 16:13 GMT
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், 4-ஜி சேவையை பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், கூட்டமைப்பினர் 3 நாள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன்படி 2-வது நாளான நேற்று பெரம்பலூர் மாவட்ட பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்க கிளை செயலாளர் ஜெகநாதன் தலைமையில், ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 
Tags:    

Similar News