செய்திகள்
சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் அருகே இன்று காலை வாலிபர் ஒருவர் விஷம் குடித்து இறந்து கிடந்தார். இது பற்றி தகவல் அறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கையில் அந்த வாலிபர் ஈரோடு மாவட்டம் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த நடேசன் மகன் முருகேசன் (வயது 30) என்பது தெரியவந்தது. இவர் எதற்காக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்? என தெரியவில்லை.
இது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.