செய்திகள்
கோவை அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை சிறுமுகை அருகே உள்ள மீனம்பாளையத்தை சேர்ந்தவர் முருகன் (வயது42). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டார். ஆனால் அவர் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் மனவேதனை அடைந்த முருகன் மதுவுடன் விஷத்தை கலந்து குடித்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடடினயாக அவரை மீட்டு அன்னூர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் முருகன் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.