குடும்ப தகராறில் விசைத்தறி உரிமையாளர் உள்பட 2 பேர் தற்கொலை
கோவை:
கோவை கருமத்தமப்பட்டி அருகே உள்ள பெரிய மோரிப்பாளையம் தோட்டத்து சாலையை சேர்ந்தவர் நாச்சி முத்து (வயது 38). விசைத்தறி உரிமையாளர்.
சம்பவத்தன்று இவர் மது போதையில் வீட்டுக்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த நாச்சிமுத்து விஷத்தை குடித்தார். இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நாச்சி முத்து பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆனைமலை ரெட்டியூரை சேர்ந்தவர் பிரசாந்த் (27). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த பிரசாந்த் வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து ஆழியாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து பிரசாந்தின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.