செய்திகள்
திருச்சுழி அருகே கல்லூரி மாணவர் தற்கொலை
திருச்சுழி அருகே தந்தை திட்டியதால் கல்லூரி மாணவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்
திருச்சுழி:
திருச்சுழி அருகே உள்ள தொப்பலாக்கரையைச் சேர்ந்தவர் செல்வக்குமார். இவரது மகன் கார்த்திகேயன் (வயது 19). அருப்புக்கோட்டை தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இவர் சரியாக படிக்காததால் இவரது தந்தை திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த கார்த்திகேயன் பூச்சி மருந்து குடித்தார். பின்னர் அருப்புக்கோட்டை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து பரளச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சுழி அருகே உள்ள தொப்பலாக்கரையைச் சேர்ந்தவர் செல்வக்குமார். இவரது மகன் கார்த்திகேயன் (வயது 19). அருப்புக்கோட்டை தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். இவர் சரியாக படிக்காததால் இவரது தந்தை திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனம் உடைந்த கார்த்திகேயன் பூச்சி மருந்து குடித்தார். பின்னர் அருப்புக்கோட்டை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து பரளச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.