செய்திகள்

கோபியில் லஞ்சம் வாங்கி தலைமறைவாக உள்ள போலீஸ் அதிகாரி வீட்டில் சோதனை

Published On 2019-01-29 10:24 GMT   |   Update On 2019-01-29 10:24 GMT
கோபியில் லஞ்சம் வாங்கி தலைமறைவாக உள்ள போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.
கோபி:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் பதி.

இவர் சத்தியமங்கலம் வனப்பகுதியில் அதிக லோடுடன் வரும் லாரிகளை மடக்கி அதன் உரிமையாளர்களிடம் லஞ்சம் கேட்டுள்ளார்.

இது பற்றிய புகாரின் லஞ்ச ஒழிப்பு போலீசார் கடந்த 10 தினங்களுக்கு மாறு வேடத்தில் லாரியில் சென்றனர். அந்த லாரியையும் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் பதி மடக்கி லஞ்சம் கேட்டு உள்ளார்.

மாறு வேடத்தில் இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும்-களவுமாக பிடித்தனர். பிறகு அவரை அழைத்து சென்றபோது பின்னால் போலீஸ் வாகனத்தில் சென்ற பதி திடீர் தலைமறைவானார்.

அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து தேடி கொண்டு இருக்கிறார்கள். அவர் பதுங்கி இருக்கும் இடம் குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் கோபியில் உள்ள போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பதி வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

ஈரோட்டிலிருந்து சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News