செய்திகள்

ஏரியூர் அருகே விஷம் குடித்த மாணவர் உயிரிழப்பு

Published On 2019-01-28 13:14 GMT   |   Update On 2019-01-28 13:14 GMT
ஏரியூர் அருகே விஷம் குடித்த மாணவர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தர்மபுரி

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அடுத்துள்ள நாகமரை இந்திரா நகர் காலனியை சேர்ந்தவர் குமார். இவரது மகன் வல்லரசு (வயது 21). இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். 

இந்த நிலையில் கடந்த 26ஆம் தேதி வல்லரசு இரவு வீட்டிற்கு வந்து உடல்நிலை சரியில்லை என்று கூறிய அவர் மயங்கி விழுந்தார். இந்த நிலையில் வல்லரசின் குடும்பத்தினர் அவரை மீட்டு பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வல்லரசை பரிசோதித்த மருத்துவர்கள் விஷம் குடித்து இருப்பதாக தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். ஆனால் வல்லரசு சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஏரியூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News