செய்திகள்
திருமங்கலம் அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி - போலீஸ் விசாரணை
திருமங்கலம் அருகே ரெயிலில் அடிபட்டு வாலிபர் பரிதாபமாக இறந்தார். அவர் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பேரையூர்:
திருமங்கலத்தை அடுத்துள்ள சிவரக்கோட்டை ரெயில்வே தண்டவாளத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் தலை, உடல் துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
தகவல் அறிந்ததும் விருதுநகர் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் குருசாமி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரெயில் மோதி இறந்த அந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. பலியான வாலிபர் தனது கையில் மஞ்சள், கருப்பு கயிறு கட்டியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.
திருமங்கலத்தை அடுத்துள்ள சிவரக்கோட்டை ரெயில்வே தண்டவாளத்தில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் தலை, உடல் துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.
தகவல் அறிந்ததும் விருதுநகர் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் குருசாமி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரெயில் மோதி இறந்த அந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை. பலியான வாலிபர் தனது கையில் மஞ்சள், கருப்பு கயிறு கட்டியுள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.