செய்திகள்

பணகுடி அரிசி ஆலையில் எந்திரத்தில் சிக்கி விவசாயி பலி

Published On 2019-01-25 12:11 GMT   |   Update On 2019-01-25 12:11 GMT
பணகுடி அரிசி ஆலையில் எந்திரத்தில் சிக்கி விவசாயி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

பணகுடி அருகே உள்ள கோலியன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் பகவதி (வயது70), விவசாயி. இவர் நெல் அரைப்பதற்காக பணகுடியில் உள்ள அரிசி ஆலைக்கு சென்றார். அங்கு எந்திரத்தில் நெல்லை கொட்டும் போது பகவதி தவறி எந்திர பெல்டில் விழுந்தார்.

இதில் தூக்கி வீசப்பட்ட பகவதியின் தலை உடைந்து ரத்தம் கொட்டியது. சம்பவ இடத்திலேயே பகவதி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் டேவிட் ரவிராஜன் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி அரிசி ஆலை நிர்வாகி மீது வழக்குப் பதிவு செய்தனர்.

Tags:    

Similar News