செய்திகள்

நெல்லையில் பெண் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2019-01-24 12:43 GMT   |   Update On 2019-01-24 12:43 GMT
நெல்லையில் வாலிபருடன் மகள் ஓட்டம் பிடித்ததால் மன வேதனை அடைந்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெல்லை:

நெல்லையை அடுத்த தச்சநல்லூர் அருகே உள்ள கரையிருப்பு கணபதி மில் காலனியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சீதாலட்சுமி (வயது43). இவர்களது மகள் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்தார். 

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காதல் ஜோடி ஊரைவிட்டு ஓட்டம் பிடித்தது. இது சீதாலட்சுமிக்கு மன வேதனையை ஏற்படுத்தியது. 

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் திடீரென்று தூக்கு மாட்டிக்கொண்டார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சீதாலட்சுமி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தச்சநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News