search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் தூக்குபோட்டு தற்கொலை"

    • தனஸ்ரீ வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சின்னியம்பாளையம் பாரதி நகரை சேர்ந்தவர் காந்திபன். இவரது மகள் தனஸ்ரீ (வயது 31). இவருக்கு கடந்த 8 வருடங்களுக்கு முன்பு போடிநாயக்கனூரை சேர்ந்த கார்த்திக் பிரபு என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

    இவர்களுக்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளார். கணவன், மனைவிக்கு இடை யே ஏற்பட்ட குடும்ப பிரச்ச னை காரணமாக இருவரும் தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

    இதனால் தனஸ்ரீ நீண்ட நாட்களாக மன வேதனையில் இருந்து வந்து ள்ளார். இந்நிலையில் சம்பவ த்தன்று தனஸ்ரீ வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பின்னர் இது குறித்து அவரது தந்தை காந்தி பன் மொடக்கு றிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் அளி த்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • ரஞ்சிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டிக் கொண்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் சின்ன வலசு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வர் சுரேஷ். இவரது மனைவி ரஞ்சிதா (வயது 28). இவர்கள் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இருவ ருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சுரேஷ் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவி ரஞ்சிதாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இந்நிலையில் சுரேஷ் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இதனால் மன உளைச்சல் அடைந்த ரஞ்சிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டிக் கொண்டார்.

    இதைப் பார்த்த ரஞ்சிதாவின் மகள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மரு த்துவமனையில் சிகிச்சை க்காக சேர்த்தனர்.

    இந்நிலையில் அங்கு சிகி ச்சை பெற்று வந்த ரஞ்சிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    பின்னர் இது குறித்து ரஞ்சிதாவின் தாய் விஜயா ஈரோடு வடக்கு போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • தூக்கிட்ட நிலையில் சாந்தி தொங்கியவாறு இருந்துள்ளார்.
    • ஈரோடு தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு சாஸ்திரி நகர், வாய்க்கால் மேடு, குமரன் நகரை சேர்ந்தவர் சரவணன் (44). இவரது மனைவி சாந்தி (33). உறவினர்களான இருவருக்கும் கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

    இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். சாந்தி ஈரோட்டில் உள்ள பிரபல துணிக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். சரவணன் சரி வர வேலை க்கு செல்லாமல், வீட்டை கவனிக்காமல் இருந்து வந்துள்ளார்.

    இதனால் குடும்பம் நடத்துவதில் சிரமம் ஏற்பட்டு வந்துள்ளது. அதனால் சமீப காலமாக சாந்தி மன அழுத்தத்துடன் இருந்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று மாலை சாந்தியின் மகன் பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்துள்ளது.

    வெகு நேரம் கதவை தட்டியும் திறக்காததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

    அப்போது பேன் மாட்டும் கொக்கியில் தூக்கிட்ட நிலையில் சாந்தி தொங்கியவாறு இருந்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு ஈரோடு அரசுத் தலைமை மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே சாந்தி இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து ஈரோடு தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மனம் உடைந்து காணப்பட்ட பார்வதி சேலையால் தூக்குபோட்டு கொண்டார்.
    • கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோபி:

    கோபிசெட்டிபாளையம் நஞ்சப்பா வீதியை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மனைவி பார்வதி (வயது 56). பார்வதி மகளிர் சுய உதவி குழுவில் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.

    இதனால் அவருக்கு அதிக கடன் ஏற்பட்டதாக தெரிகிறது. தொடர்ந்து பணம் கட்ட முடியாமல் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் கடன் கட்டுவதற்காக பணம் கிடைக்க வில்லை என கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்து காணப்பட்ட அவர் திடீரென நேற்று இரவு சேலையால் தூக்கு போட்டு கொண்டார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவரை பரிசோ தனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மனம் உடைந்து காணப்பட்ட சிந்து திடீரென வீட்டில் மின்விசிறியால் தூக்குபோட்டு கொண்டார்.
    • இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அடுத்த பெருமுகை ஏரங்காட்டூரை சேர்ந்தவர் சின்னசாமி. இவரது மகன் சேகர் (23) இவர் விவசாய கூலி வேலை செய்து வருகிறார்.

    இவர் அதே பகுதியை சேர்ந்த சிந்து (21) என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் சிந்துவின் பெற்றோர் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதன் பிறகு அவர்களை ஏற்று கொண்டனர்.

    இந்நிலையில் அவர்களது குழந்தை நிச்சிகாவை, சிந்து வின் தந்தை அவரது வீட்டுக்கு அழைத்து சென்று விட்டு பின்னர் மாலை அழைத்து வந்தார்.

    அப்போது சேகர், சிந்துவிடம் ஏன் குழந்தையை அங்கு அனுப்புகிறாய் என கேட்டார். இதனால் அவர்களுக்கள் தகராறு ஏற்பட்ட தாக கூறப்படுகிறது. இதனையடுத்து சேகர் வெளியில் சென்றுள்ளார்.

    இதனால் மனம் உடைந்து காணப்பட்ட சிந்து திடீரென வீட்டில் மின்விசிறியால் தூக்குபோட்டு கொண்டார். இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் சிந்துவின் பெற்றோருக்கு தகவல் தெரி வித்தனர்.

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் சிந்துவை மீட்டு கோபி செட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து சிந்துவை மேல் சிகிச்சைக்காக பெரு ந்துறை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த சிந்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து பங்களா ப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சேகர்-சிந்து திரு மணம் நடந்து 3 வருடங்களே ஆவதால் ஆர்.டி.ஓ. மற்றும் ஏ.எஸ்.பி. விசாரணை நடக்கிறது.

    ×