search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் தூக்குபோட்டு தற்கொலை
    X

    பெண் தூக்குபோட்டு தற்கொலை

    • ரஞ்சிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டிக் கொண்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு வீரப்பன்சத்திரம் சின்ன வலசு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த வர் சுரேஷ். இவரது மனைவி ரஞ்சிதா (வயது 28). இவர்கள் கடந்த 12 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

    இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இருவ ருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சுரேஷ் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவி ரஞ்சிதாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இந்நிலையில் சுரேஷ் தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இதனால் மன உளைச்சல் அடைந்த ரஞ்சிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டிக் கொண்டார்.

    இதைப் பார்த்த ரஞ்சிதாவின் மகள் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு ஈரோடு அரசு தலைமை மரு த்துவமனையில் சிகிச்சை க்காக சேர்த்தனர்.

    இந்நிலையில் அங்கு சிகி ச்சை பெற்று வந்த ரஞ்சிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    பின்னர் இது குறித்து ரஞ்சிதாவின் தாய் விஜயா ஈரோடு வடக்கு போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×