செய்திகள்

தேர்தல் கூட்டணி குறித்து நாமக்கல் மாநாட்டிற்கு பின் முடிவு- ஈஸ்வரன் பேட்டி

Published On 2019-01-21 13:33 GMT   |   Update On 2019-01-21 13:33 GMT
வருகிற பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியோடு கூட்டணி என்பதை நாமக்கல்லில் நடைபெறும் மாநாட்டிற்குப் பின்னர் முடிவு செய்வோம் என்று ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். #eswaran #parliamentelection #kmdk

மேட்டுப்பாளையம்:

கோவை வடக்கு மாவட்ட கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் பொதுக்குழு கூட்டம் மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு நகர துணைத்தலைவர் ரங்கசாமி தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் வக்கீல் பி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். நகர செயலாளர் திருமூர்த்தி வரவேற்றுப்பேசினார்.

கூட்டத்தில் கட்சியின் பொது செயலாளர்.ஈஸ்வரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

வருகிற பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சியோடு கூட்டணி என்பதை நாமக்கல்லில் நடைபெறும் மாநாட்டிற்குப் பின்னர் முடிவு செய்வோம்.

அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் மேட்டுப்பாளையம் தாலுகாவில் விடுபட்ட பகுதிகளையும் இணைத்து பழைய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நாமக்கல்லில் வருகிற 3-ந் தேதி நடைபெறும் 2-வது உலக கொங்கு தமிழ் மாநாட்டில் திரளாக கலந்து கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. #eswaran #parliamentelection #kmdk

Tags:    

Similar News