செய்திகள்

குளித்தலையில் மது விற்ற 3 பேர் கைது

Published On 2019-01-18 17:10 GMT   |   Update On 2019-01-18 17:10 GMT
குளித்தலையில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தோகைமலை

கரூர் மாவட்டம் குளித்தலை சுங்ககேட் டாஸ்மாக் கடை அருகே முசிறி தண்டலைப்புத்தூரை சேர்ந்த செல்லதுரை மகன் சுப்பிரமணியன் (32) என்பவர் மது விற்பதாக அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் பேரில், குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி அவரை கைது செய்தார். 

அதேபோல் குளித்தலையை அடுத்த வை.புதூரை சேர்ந்த மணி மகன் வீரமலை(42) என்பவர் தனது வீட்டில் மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் பேரில், குளித்தலை போலீசார் வழக்குபதிவு செய்து வீரமலையை கைது செய்தனர். இருவரிடம் இருந்தும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார். 

மேலும் மணப்பாறை பெரியப்பட்டியை சேர்ந்த ராமசாமி மகன் சண்முகவேல்(37) என்பவர், தோகைமலை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட நாடக்காப்பட்டி பஸ் நிறுத்தத்தில் மது விற்பனை செய்வதாக அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின்பேரில் தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகவேலை கைது செய்தனர்.
Tags:    

Similar News