செய்திகள்

ஜோலார்பேட்டை அருகே காதல் தோல்வியால் வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2019-01-18 14:03 GMT   |   Update On 2019-01-18 14:03 GMT
ஜோலார்பேட்டை அருகே காதல் தோல்வியால் வாலிபர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அருகே உள்ள குன்னத்தூரை சேர்ந்தவர் அச்சுதன் இவரது மகன் குணசேகரன் (வயது 20). கூலிதொழிலாளி. இவர் ஜோலார்பேட்டை பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

பலமுறை அந்த பெண்ணிடம் தன் காதலை தெரியப்படுத்தியும் அந்த பெண் குணசேகரனின் காதலை ஏற்க மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார்.

நேற்று வீட்டின் அருகே உள்ள மாந்தோப்பில் குணசேகரன் வி‌ஷம் குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். அவரை மீட்ட நண்பர்கள் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

குணசேகரன் சிக்ச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News