செய்திகள்

நாகரத்தின கல் விற்பனை - வாலிபர் கொலையில் 3 பேர் கைது

Published On 2019-01-14 10:10 GMT   |   Update On 2019-01-14 10:13 GMT
திண்டுக்கல் அருகே நாகரத்தின கல் விற்பனையில் வாலிபர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 3 பேர் கைதாகினர்.
வடமதுரை:

திண்டுக்கல் என்.எஸ். நகரை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் சிவக்குமார் (வயது27). டீக்கடை நடத்தி வந்தார். இவரது நண்பர் அஞ்சுகுழிபட்டியை சேர்ந்த ஹரிகரன் (23). இவரது தந்தை சந்தான கிருஷ்ணன் நாகரத்தின கல் வாங்குவதற்காக கடந்த 4 நாட்களுக்கு முன்பு செங்குறிச்சி பகுதிக்கு சென்றார். அவருடன் சிவக்குமார் மற்றும் ஹரிகரனும் சென்றனர். மலையூரைச் சேர்ந்த முருகன் (42) என்பவரிடம் ரூ.3 லட்சம் பணத்தை கொடுத்து விட்டு நாகரத்தின கல்லை கேட்டனர்.

அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முருகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிவக்குமாரையும், ஹரிகரனையும் கத்தியால் குத்தினர். படுகாயம் அடைந்த சிவக்குமார் உயிரிழந்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் ஹரிகரன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தினர். இவ்வழக்கில் தொடர்புடைய முருகன், அவரது உறவினர்கள் வெள்ளைச்சாமி, சின்னையா ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News