செய்திகள்
கோவை ரெயிலில் இளம்பெண்ணிடம் நகை- பணம் திருட்டு
கோவை ரெயிலில் இளம்பெண்ணிடம் நகை- பணம் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
நீலகிரி மாவட்டம் குன்னூர் கணேசபுரத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 27). இவரது மனைவி அனுப்பிரியா (25). இவர்கள் மன்னார்குடி- கோவை செல்லும் செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருச்சியில் நேற்று இரவு ஏறினர்.
இன்று அதிகாலை திருப்பூர் வந்ததும் அனுப்பிரியா தனது பேக்கை வைத்து வீட்டு பாத்ரூமுக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது அங்கிருந்த பேக்கை காணவில்லை. அதில் 5 பவுன் நகை, ரூ.5.500 பணம், ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவைகள் இருந்தன. மர்ம நபர் கைபையை திருடிச்சென்றது தெரியவந்தது.
இந்நிலையில் ரெயில் கோவை வந்தது. கோவை ரெயில்வே போலீசில் கார்த்திக் புகார் செய்தார். இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் நகை பையை திருடிச்சென்ற நபரை தேடி வருகிறார்கள்.