செய்திகள்

சாத்தான்குளத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவன் கைது

Published On 2019-01-04 10:50 GMT   |   Update On 2019-01-04 10:50 GMT
சாத்தான்குளத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய சிறுவனை போலீசார் கைது செய்தனர். கட்டிட தொழிலாளியை தேடி வருகிறார்கள்.

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் அருகே உள்ள படுக்கப்பத்து நடுத்தெருவை சேர்ந்தவர் முத்துச்செல்வன் (வயது 42). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் அப்பகுதியில் உள்ளது. கடந்த 2-ந் தேதி முத்துச்செல்வன் தனது மோட்டார் சைக்கிளை சாலையோரத்தில் நிறுத்தி விட்டு தோட்டத்திற்கு சென்றார். பின்னர் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை.

இது குறித்து தட்டார்மடம் போலீசில் அவர் புகார் செய்தார். இதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் நேற்று மாலை தட்டார்மடம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும்படி நின்ற ஒரு சிறுவனை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவன் உடன்குடியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் புத்தன்தருவையை சேர்ந்த கட்டிட தொழிலாளி செந்தில்வேல் என்பவருடன் சேர்ந்து விவசாயி முத்துச்செல்வன் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. 

இதையடுத்து அந்த சிறுவனை கைது செய்த போலீசார் அவனிடமிருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். மேலும் செந்தில்வேலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News