செய்திகள்
சூலூர் அருகே குடும்ப தகராறில் கணவன்-மனைவி தற்கொலை முயற்சி
கோவை மாவட்டம் சூலூர் அருகே குடும்ப தகராறு காரணமாக கணவன், மனைவி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சூலூர்:
சூலூர் அருகே நடுப்பாளையம் பழனியாண்டவர் கோவில் வீதியை சேர்ந்தவர் ராமன். இவரது மகன் சுரேஷ் (வயது 25). இவர் ராமநாதபுரம் போலீசாருக்கு உதவியாக முழு நேர பிரண்ட்ஸ் ஆப் போலீசாக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும் திருப்பூரைச் சேர்ந்த மைதிலி (20) என்ற பெண்ணிற்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 9 மாத கைக்குழந்தை உள்ளது.
சுரேசுக்கு போதிய வருமானம் இல்லாததால், மைதிலி குடும்பம் நடத்த பணம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் சுரேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு கமேண்டோ பயிற்சி பெறுவதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு சென்றார். பயிற்சி முடிந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு திரும்பினார்.
சம்பவத்தன்று மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் மனவேதனை அடைந்த 2 பேரும் தற்கொலை செய்வது என முடிவு செய்தனர். அதன்படி 2 பேரும் சாணிப்பவுடரைக் குடித்தனர். சிறிது நேரத்தில் கணவன்-மனைவி இருவரும் மயங்கினர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சுரேஷ், மைதிலி ஆகியோருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சூலூர் அருகே நடுப்பாளையம் பழனியாண்டவர் கோவில் வீதியை சேர்ந்தவர் ராமன். இவரது மகன் சுரேஷ் (வயது 25). இவர் ராமநாதபுரம் போலீசாருக்கு உதவியாக முழு நேர பிரண்ட்ஸ் ஆப் போலீசாக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும் திருப்பூரைச் சேர்ந்த மைதிலி (20) என்ற பெண்ணிற்கும் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 9 மாத கைக்குழந்தை உள்ளது.
சுரேசுக்கு போதிய வருமானம் இல்லாததால், மைதிலி குடும்பம் நடத்த பணம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் சுரேஷ் கடந்த சில நாட்களுக்கு முன்பு கமேண்டோ பயிற்சி பெறுவதாக தனது மனைவியிடம் கூறிவிட்டு சென்றார். பயிற்சி முடிந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு திரும்பினார்.
சம்பவத்தன்று மீண்டும் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
இதனால் மனவேதனை அடைந்த 2 பேரும் தற்கொலை செய்வது என முடிவு செய்தனர். அதன்படி 2 பேரும் சாணிப்பவுடரைக் குடித்தனர். சிறிது நேரத்தில் கணவன்-மனைவி இருவரும் மயங்கினர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சுரேஷ், மைதிலி ஆகியோருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.