செய்திகள்

திண்டுக்கல் அருகே 3 குழந்தைகளுடன் மாயமான இளம்பெண்

Published On 2018-12-26 10:58 GMT   |   Update On 2018-12-26 10:58 GMT
திண்டுக்கல் அருகே 3 குழந்தைகளுடன் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆத்தூர்:

திண்டுக்கல் அருகே செம்பட்டி பச்சமலையான் கோட்டை கோகுல்நகரை சேர்ந்தவர் செந்தில்(வயது42). பன் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவியும், அகிலன் என்ற மகனும், திவ்யா உள்பட 2 மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று வழக்கம்போல் செந்தில் வியாபாரத்திற்கு சென்றுவிட்டார். இரவு வீடு திரும்பியபோது மனைவி மற்றும் குழந்தைகள் அங்கு இல்லாததது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம்பக்கம் விசாரித்தபோதும் எந்த தகவலும் கிடைக்கவில்லை.

உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் செம்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து குடும்ப பிரச்சினையில் இளம்பெண் குழந்தைகளுடன் மாயமானாரா? அல்லது யாரேனும் கடத்திச்சென்றனரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News