செய்திகள்
ஜோலார்பேட்டை அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்
ஜோலார்பேட்டை அருகே குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை பெரியமூக்கனூர் அருகே உள்ள தாய பவட்டம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் முறையாக வழங்கபடவில்லை. அப்பகுதி பெண்கள் குடிநீருக்காக பக்கத்து கிராமங்களுக்கு செல்ல வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குடிநீர் பிரச்சனையை தீர்க்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டு மனு கொடுத்தனர். ஆனால், இது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை காலி குடங்களுடன் திருப்பத்தூர்- நாட்டறம்பள்ளி சாலையில் திடீர்சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம்குமார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து, மறியலை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஜோலார்பேட்டை பெரியமூக்கனூர் அருகே உள்ள தாய பவட்டம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் முறையாக வழங்கபடவில்லை. அப்பகுதி பெண்கள் குடிநீருக்காக பக்கத்து கிராமங்களுக்கு செல்ல வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குடிநீர் பிரச்சனையை தீர்க்கக்கோரி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டு மனு கொடுத்தனர். ஆனால், இது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை காலி குடங்களுடன் திருப்பத்தூர்- நாட்டறம்பள்ளி சாலையில் திடீர்சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேம்குமார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து, மறியலை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.