செய்திகள்

சேலத்தில் இளம்பெண் தற்கொலை

Published On 2018-12-21 14:52 GMT   |   Update On 2018-12-21 14:52 GMT
சேலத்தில் கணவரை இழந்த இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்:

சேலம் ஜாகீர் அம்மாபாளையத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வி (வயது 22). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இதையடுத்து தமிழ்செல்வி தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் இன்று சாலை சாணி பவுடர் குடித்து தமிழ்செல்வி வீட்டில் மயங்கி கிடந்தார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியி ல் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து சூரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News