செய்திகள்
வாழவந்தான் கோட்டையில் நாளை மின் தடை
திருச்சி வாழவந்தான் கோட்டையில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9.45 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.
திருச்சி
திருச்சி வாழவந்தான் கோட்டை துணை மின்நிலையத்தில் நாளை 20-ந் தேதி (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள்நடை பெற உள்ளதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான ஜெய்நகர், திருவேங்கடநகர், கணேச புரம், கணபதி நகர், பெல் டவுன்ஷிப்பில் சி.செக்டாரில் ஒரு பகுதி, சொக்கலிங்கபுரம், இம்மானுவேல் நகர், வ.உ.சி. நகர், எழில்நகர், அய்யம்பட்டி, வாழவந்தான் கோட்டை, வாழவந்தான் கோட்டை சிட்கோ தொழிற்பேட்டை, திருநெடுங்குளம், தொண்டைமான்பட்டி, பெரியார் நகர், ரெட்டியார் தோட்டம், ஈச்சங்காடு, பர்மாநகர், மாங்காவனம் ஆகிய பகுதிகளுக்கு காலை 9.45 மணி முதல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது.
இத்தகவலை திருச்சி மன்னார்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.