செய்திகள்

கோவை அருகே குடும்ப தகராறில் 2 இளம்பெண்கள் தற்கொலை

Published On 2018-12-11 10:56 GMT   |   Update On 2018-12-11 10:56 GMT
கோவை அருகே குடும்ப தகராறில் 2 இளம்பெண்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி திவ்யா (வயது 27).

நேற்று இரவு கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த திவ்யா வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் தூக்கு கயிற்றில் இருந்து திவ்யாவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு திவ்யாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேட்டுப்பாளையம் கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் மகேஷ். இவரது மனைவி கவிதா (30).

சம்பவத்தன்று வீட்டில் இருந்த போது கவிதாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த கவிதா தற்கொலை செய்வது என முடிவு செய்தார்.

அதன்படி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வாழ்க்கையில் விரக்தி அடைந்து மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ பற்ற வைத்தார். தீ மளமளவென அவரது உடல் முழுவதும் பரவியது. இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து கவிதாவை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை கவிதா பரிதாபமாக இறந்தார். இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News