செய்திகள்

விருதுநகரில் சிறுமியை கடத்தி திருமணம்- போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

Published On 2018-12-11 10:15 GMT   |   Update On 2018-12-11 10:15 GMT
விருதுநகரில் 17 வயது சிறுமியை கடத்தி திருமணம் செய்ததாக போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர்:

விருதுநகர் நடுவப்பட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது 30). தீப்பெட்டி ஆலை தொழிலாளி. இவர் அதேபகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் பழகினார்.

இந்த நிலையில் கணேசன் அந்த சிறுமியை கடத்திச்சென்று திருமணம் செய்து கொண்டதாக சிறுமியின் தாயார் பாக்கியலட்சுமி போலீசில் புகார் செய்தார்.

இதுகுறித்து வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அவர்கள் கடத்தப்பட்ட சிறுமியை மீட்டதோடு கணேசனையும் கைது செய்தனர்.

கணேசன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமி காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
Tags:    

Similar News