செய்திகள்

ரெயில்வே ஊழியர் விஷம் குடித்து தற்கொலை

Published On 2018-12-06 18:15 GMT   |   Update On 2018-12-06 18:15 GMT
மதுவில் விஷத்தை கலந்து குடித்து ரெயில்வே ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.
திருச்சி:

திருச்சி கல்லுக்குழி ரெயில்வே காலனியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன்(வயது 52). ரெயில்வே ஊழியர். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாதபோது, அவர் மதுவில் விஷத்தை கலந்து குடித்து விட்டு மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், கடன் சுமை அதிகமானதால் அவர் மனமுடைந்து தற்கொலை செய்து இருக்கலாம் என தெரியவந்தது. தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். 
Tags:    

Similar News