செய்திகள்
நெல்லை அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள ராமையன்பட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது63), கூலித்தொழிலாளி. இவர் அடிக்கடி மது குடித்து வந்ததால் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் முருகன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.
இதனால் அவருக்கு குடிக்க பணம் கிடைக்க வில்லை. இதில் மனமுடைந்த முருகன் நேற்று வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.