செய்திகள்
புளியங்குடி அருகே வேன் மோதி தொழிலாளி பலி
புளியங்குடி அருகே வேன் மோதிய விபத்தில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
புளியங்குடி:
புளியங்குடி அருகே உள்ள மலையடிகுறிச்சி காலசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் கருத்தப்பாண்டி இவரது மகன் கோட்டூர்சாமி (வயது 38). தொழிலாளி. இவர் நேற்று காலை கோட்டூர்சாமி மலையடிகுறிச்சி ஆற்றுப்பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த தனியார் ஆலையில் வேலை செய்யும் ஆட்களை ஏற்றி வந்த வேன் கோட்டூர்சாமி மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட கோட்டூர்சாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
இது குறித்து தகவலறிந்த புளியங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோட்டூர்சாமி உடல் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.