செய்திகள்
ராஜபாளையம் அருகே விபத்தில் வெல்டிங் தொழிலாளி பலி
ராஜபாளையம் அருகே விபத்தில் வெல்டிங் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் சீதக்காதி தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 45). வெல்டிங் தொழில் செய்து வந்தார். ஆறுமுகம் நேற்று மாலை ராஜபாளையம்-மதுரை ரோட்டில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
அழகாபுரி விலக்கில் சென்று கொண்டிருந்த அவர் மீது அந்த வழியாக வந்த அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் மோதியது.
இந்த விபத்தில் ஆறுமுகம் படுகாயமடைந்தார். ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து ஆறுமுகத்தின் மனைவி ராஜபாளையம் வடக்கு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் கோபாலகிருஷ்ணனை கைது செய்தார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.