செய்திகள்

சென்னை அருகே தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் வைர நகைகள் திருட்டு

Published On 2018-11-27 09:19 GMT   |   Update On 2018-11-27 09:19 GMT
தனியார் நிறுவன அதிகாரி வீட்டில் வைர நகைகள் திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் வசித்து வருபவர் அபிஷேக் ஆனந்த். பிரபல தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரிபி.

சம்பவத்தன்று ரிபி வீட்டில் இருந்த நகைகளை சரிபார்த்தார். அப்போது வைர நகைகளை மேஜையில் வைத்து விட்டு வெளியே சென்றார்.

சிறித நேரம் கழித்து திரும்பி வந்தபோது வைர நகைகளை காணவில்லை. இதன் மதிப்பு ரூ.4½ லட்சம் ஆகும்.

இதுகுறித்து அபிராமபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. வீட்டில் வேலை செய்தவர்கள் நகையை திருடினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News