செய்திகள்

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வாலிபர் கைது

Published On 2018-11-19 14:16 GMT   |   Update On 2018-11-19 14:16 GMT
ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக, 5 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அரூர்:

தருமபுரி மாவட்டம், அரூர் அடுத்த சோரியம்பட்டியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (46) எல்.ஐ.சி., முகவர். இவரது மனைவி வசந்தி (38) எம்.எஸ்.சி.,பி.எட்., படித்துள்ளார். இவருக்கு ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாக கூறி எல்லப்புடையாம் பட்டியை சேர்ந்த ராமஜெயம் (38) என்பவர், கடந்த 2017-மே மாதம் 5 லட்சம் ரூபாய் பணத்தை ராமமூர்த்தியிடம் இருந்து வாங்கியுள்ளார்.

இந்த நிலையில், வேலையும் வாங்கித் தராமல், பணத்தையும் கொடுக்காமல் ராமஜெயம் இருந்து வந்துள்ளார். இது குறித்து, மோப்பிரிப்பட்டி அண்ணா நகர் அருகே, ராமஜெயத்திடம், ராமமூர்த்தி கேட்டபோது, அவரை ஆபாசமாக திட்டியதுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளார். புகாரின் படி, அரூர் இன்ஸ்பெக்டர் பவுலோஸ் வழக்குபதிவு செய்து ராமஜெயத்தை கைது செய்தார்.
Tags:    

Similar News