செய்திகள்
லாரி மோதி விபத்து- சப்-இன்ஸ்பெக்டர் கால் துண்டானது
பூந்தமல்லி அருகே மோட்டார்சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் ரோந்து பணியில் ஈடுபட்ட சப்-இன்ஸ்பெக்டர் கால் துண்டானது.
பூந்தமல்லி:
பூந்தமல்லி முத்துக்குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது56). இவர் நசரத்பேட்டை போலீஸ் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று காலை இவர் பூந்தமல்லி-பெங்களூர் நெடுஞ்சாலை பாப்பான் சத்திரம் பகுதியில் மோட்டார்சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அவர் சாலையை கடந்த போது காஞ்சீபுரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த டிப்பர் லாரி அவர் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். அவரது காலில் லாரி சக்கரம் ஏறி நசுக்கியது.
படுகாயம் அடைந்த அவரை ராமாபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரது கால் துண்டிக்கப்பட்டது.
அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக சங்கரன் கோவிலைச் சேர்ந்த லாரி டிரைவர் அந்தோணி கைது செய்யப்பட்டார். #tamilnews
பூந்தமல்லி முத்துக்குமரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை (வயது56). இவர் நசரத்பேட்டை போலீஸ் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று காலை இவர் பூந்தமல்லி-பெங்களூர் நெடுஞ்சாலை பாப்பான் சத்திரம் பகுதியில் மோட்டார்சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
அவர் சாலையை கடந்த போது காஞ்சீபுரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த டிப்பர் லாரி அவர் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டார். அவரது காலில் லாரி சக்கரம் ஏறி நசுக்கியது.
படுகாயம் அடைந்த அவரை ராமாபுரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரது கால் துண்டிக்கப்பட்டது.
அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து தொடர்பாக சங்கரன் கோவிலைச் சேர்ந்த லாரி டிரைவர் அந்தோணி கைது செய்யப்பட்டார். #tamilnews