செய்திகள்

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் கைதி மாரடைப்பால் பலி

Published On 2018-11-17 09:42 GMT   |   Update On 2018-11-17 09:42 GMT
மாரடைப்பால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட கைதி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

மதுரை:

மதுரை பழங்காநத்தத்தில் உள்ள திரிசூல காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந் தவர் சரவணன் என்ற தூள் சரவணன் (வயது 46). இவரை கொலை வழக்கு தொடர்பாக சுப்பிரமணிய புரம் போலீசார் கைது செய்து மதுரை மத்திய சிறை யில் அடைத்தனர்.

கடந்த சில நாட்களாகவே சரவணனுக்கு உடல்நலக் குறைவு இருந்ததாக தெரி கிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனே சிறைத் துறை போலீசார் அவரை சிறையில் உள்ள ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர்.

அங்கு நிலைமை மோச மானதால் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். நேற்று சரவணன் சிகிச்சை பல னின்றி பரிதாபமாக இறந் தார்.

இதுகுறித்து சிறைத்துறை அதிகாரி இளங்கோ கொடுத்த புகாரின் பேரில் அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News