திருவாண்டார் கோவிலில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை
திருபுவனை:
திருபுவனை அருகே திருவாண்டார் கோவில் பெரிய காலனியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் வெங்கடேச பெருமாள் (வயது 25). இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
குடிப்பழக்கம் உள்ள வெங்கடேச பெருமாளுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் வெங்கடேச பெருமாளை மது குடிக்க வேண்டாம் என டாக்டர்கள் அறிவுறுத்தி இருந்தனர்.
அதன்படி கடந்த 4 நாட்களாக வெங்கடேச பெருமாள் மது குடிக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில் மதுகுடிக்காததால் வெங்கடேச பெருமாளுக்கு கை- கால் நடுக்கம் ஏற்பட்டது.
இதனால் விரக்தி அடைந்த வெங்கடேச பெருமாள் கை- கால் நடுக்கத்தால் வருங்காலத்தில் எந்த வேலையும் செய்ய முடியாது என்று எண்ணி மனமுடைந்தார்.
தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருபுவனை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா, ஏட்டு ஜெயதேவன் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.