செய்திகள்

இடையர்பாளையம் அருகே வேன் மோதி முதியவர் பலி

Published On 2018-11-16 12:03 GMT   |   Update On 2018-11-16 12:03 GMT
இடையர்பாளையம் அருகே வேன் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கன்னியாகுமரி மாவட்டம் ஆலங்குளம் குளத்து விலை பகுதியை சேர்ந்தவர் அந்தோணி (வயது 60). இவர் சம்பவத்தன்று இரவு கோவை இடையர்பாளையம்- தடாகம் ரோட்டில் நடந்து சென்றார்.

அப்போது சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியே வந்த சரக்கு வாகனம் அந்தோணி மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன்றி அந்தோணி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் புதுக்கோட்டையை சேர்ந்த சரவணன் (43) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News