செய்திகள்
தமிழகத்துக்கு உதவ மத்திய அரசு தயார்- உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி
கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு உதவ மத்திய அரசு தயாராக இருப்பதாக முதலமைச்சர் பழனிசாமியிடம் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். #GajaCyclone #RajnathSingh
சென்னை:
தமிழகத்துக்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசு தயாராக இருப்பதாகவும், புயல் பாதிப்புகளை கண்காணிக்கவும், நிவாரண பணிகளில் தேவையான உதவிகளை செய்ய உதவுமாறு உள்துறை செயலருக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தமிழக முதல்வரிடம் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். #GajaCyclone #RajnathSingh
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கஜா புயல் பாதிப்பு நிலவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.