செய்திகள்

மதுரையில் கணவருடன் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

Published On 2018-11-13 11:29 GMT   |   Update On 2018-11-13 11:29 GMT
மதுரையில் கணவருடன் சென்ற பெண்ணிடம் 11 பவுன் நகையை 3 பேர் பறித்து சென்றனர்.

மதுரை:

மதுரை செல்லூர் திருவாப்புடையார் கோவில் சன்னதி தெருவைச் சேர்ந்தவர் ராஜூ (வயது65). இவர் சென்ட்ரல் மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடையில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி வாழை இலை வியாபாரம் செய்து வருகிறார். இவர்கள் இருவரும் தினமும் அதிகாலையில் காய்கறி வாங்க மார்க்கெட்டுக்கு சென்று வருவது வழக்கம். நேற்று காலை தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் ராஜூ மாட்டுத் தாவணிக்கு புறப்பட்டார்.

அப்போது கோரிப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் இருவரும் டீக்குடித்தனர். அங்கு வந்த 3 வாலிபர்கள் அவர்களிடம் முகவரி கேட்டு விட்டு சென்றனர்.

டீக்குடித்த பின் கணவன்- மனைவி இருவரும் மாட்டுத் தாவணிக்கு புறப்பட்டனர். சிப்கோ அருகே சென்றபோது முகவரி கேட்ட 3 மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்து ராஜூவின் மனைவி கழுத்தில் கிடந்த 11 பவுன் நகையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News