செய்திகள்
பலியான ஸ்ரீசாந்த்

சேலத்தில் மர்ம காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுவன் பலி

Published On 2018-11-03 08:05 GMT   |   Update On 2018-11-03 08:05 GMT
சேலம் மாவட்டத்தில் மர்ம காய்ச்சலுக்கு மேலும் ஒரு சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #MysteryFever
சேலம்:

சேலம் அய்யந்திரு மாளிகை புத்துமாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி சுவிதா. இவர்களுக்கு ரித்தீஸ் (வயது 7), ஸ்ரீசாந்த் (4) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீசாந்த்துக்கு காய்ச்சல் ஏற்பட்டது. காய்ச்சலுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. நேற்று இரவு வீட்டில் இருந்தபோது திடீரென்று ஸ்ரீசாந்துக்கு மயக்கம் ஏற்பட்டது. உடனே அவரது பெற்றோர்கள் அவரை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஸ்ரீசாந்த் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் சிறுவன் ஸ்ரீசாந்த் உடலை பார்த்து கதறி அழுதனர். மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பீதியை ஏற்படுத்தியது. இது குறித்து தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டத்தில் ஏற்கனவே மர்ம காய்ச்சலுக்கு கர்ப்பிணி பெண் உள்பட 4 பேர் இறந்துவிட்டனர். தற்போது மேலும் ஒரு சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  #MysteryFever



Tags:    

Similar News