செய்திகள்
சரவணம்பட்டியில் பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு
கோவை சரவணம்பட்டியில் நடந்து சென்ற பெண்ணிடம் இருந்து 6 பவுன் நகை பறிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
சரவணம்பட்டி எல்.ஜி.பி. நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி சாந்தி(வயது 50).
இவர் நேற்று இரவு மளிகை கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சாந்தி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க செயினை பறித்தனர்.
அதிர்ச்சியடைந்த அவர் திருடன்...திருடன்... என சத்தம் போட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். அதற்குள் நகை பறித்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி விட்டனர்.
புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கூறி மாநகர் முழுவதும் போலீஸ் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. எனினும் கொள்ளையர்கள் சிக்கவில்லை.
தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி நகை பறித்த வாலிபர்களை தேடி வருகின்றனர்.
சரவணம்பட்டி எல்.ஜி.பி. நகரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மனைவி சாந்தி(வயது 50).
இவர் நேற்று இரவு மளிகை கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து வந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சாந்தி கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க செயினை பறித்தனர்.
அதிர்ச்சியடைந்த அவர் திருடன்...திருடன்... என சத்தம் போட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். அதற்குள் நகை பறித்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி விட்டனர்.
புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கூறி மாநகர் முழுவதும் போலீஸ் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டது. எனினும் கொள்ளையர்கள் சிக்கவில்லை.
தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி நகை பறித்த வாலிபர்களை தேடி வருகின்றனர்.