செய்திகள்

மரக்காணம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

Published On 2018-10-30 15:50 GMT   |   Update On 2018-10-30 15:50 GMT
மரக்காணம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சிகிச்சை பலனின்றி பலியானார்.
மரக்காணம்:

மரக்காணத்தை அடுத்த முன்னூர் புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் பலராமன் (வயது 35). நேற்று முன்தினம் இவரும், இவருடைய மனைவி லோகநாயகி, உறவினர் தனவேல் ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினம் அருகே மாஞ்சோலையில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்றனர்.

பின்னர் அவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தனர். மரக்காணத்தை அடுத்த குரும்பரம் அருகே அவர்கள் சென்றபோது திடீரென மோட்டார் சைக்கிளின் டயர் பஞ்சர் ஆனதால் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி ரோடு ஓரத்தில் இருந்த மைல்கல்லில் மோதியது. இந்த விபத்தில் லோகநாயகி தலையில் அடிபட்டு பலத்த காயம் அடைந்தார். மற்ற 2 பேரும் லேசான காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த லோகநாயகியை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு லோகநாயகியை டாக்டர் பரிசோதித்து பார்த்து அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இந்த விபத்து குறித்து மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News