செய்திகள்

ஒகேனக்கல்லில் மது விற்ற 2 பேர் கைது

Published On 2018-10-27 14:55 GMT   |   Update On 2018-10-27 14:55 GMT
ஒகேனக்கல்லில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்ற 2 பேரை கைது செய்தனர்.
தருமபுரி:

தருமபுரி, ஒகேனக்கல் போலீசார் குற்றத் தடுப்பு மற்றும் மதுவிலக்கு பிரிவின் கீழ் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒகேனக்கல்லை சேர்ந்த செண்பகவள்ளி (வயது 40). என்பவர் அவரது வீட்டில் மது பாட்டில்களை அரசுக்கு புறம்பாக பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. போலீசார் செண்பகவள்ளியை கைது செய்து அவரிடம் இருந்த இரண்டு மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

 இதேபோன்று ஏரியூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, ஏரியூரைச் சேர்ந்த பொன்னப்பன் (வயது 47). என்பவர் அரசுக்கு புறம்பாக மது பாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து சில்லரை விற்பனை செய்வது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் பொன்னப்பனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News