செய்திகள்
திருச்செந்தூரில் அண்ணியிடம் தகராறு செய்த தொழிலாளி கைது
திருச்செந்தூரில் முன் விரோத தகராறில் அண்ணியிடம் தகராறு செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
திருச்செந்தூர்:
திருச்செந்தூரை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி அம்பிகாவதி (வயது40). சொத்து தொடர்பாக பெருமாளுக்கும், அவரது தம்பி தொழிலாளியான கோவிந்தன் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வருகிறது. இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் பெருமாளை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு கோவிந்தன் சென்றுள்ளார். ஆனால் அங்கு பெருமாள் இல்லை. அவரது மனைவி அம்பிகாவதி மட்டும் இருந்தார். அவரிடம் கோவிந்தன் அவதூறாக பேசி தகராறு செய்துள்ளார். மேலும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த பைக்கையும் அடித்து உதைத்து சேதப்படுத்தியுள்ளார்.
இதுகுறித்து அம்பிகாவதி திருச்செந்தூர் கோவில் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிந்தனை கைது செய்தனர்.