செய்திகள்

ஐகோர்ட் தீர்ப்பால் எடப்பாடி அரசுக்கு நெருக்கடி நீங்கியது - அதிமுகவினர் உற்சாகம்

Published On 2018-10-25 06:37 GMT   |   Update On 2018-10-25 06:37 GMT
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது செல்லும் என ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியதை அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். #MLAsDisqualificationCase #18MLAsCaseVerdict
சென்னை:

டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது செல்லும் என உயர்நீதிமன்ற மன்றம் உறுதி செய்துள்ளது. சபாநாயகரின் முடிவு தவறு இல்லை என்று கூறிய நீதிபதி சத்தியநாராயணன், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மனுக்களையும் தள்ளுபடி செய்தார்.

மேலும், சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவோ, 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தவோ தடை இல்லை என்றும் கூறியுள்ளார்.

ஏற்கனவே திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், தற்போது 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் உறுதி செய்யப்பட்டிருப்பதால் மொத்தம் 20 தொகுதிகள் காலியாகின்றன. 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.



இந்த தீர்ப்பினையடுத்து, தமிழக சட்டசபையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 234ல் இருந்து 214 ஆக குறைந்துள்ளது. இதில் பெரும்பான்மை பெறுவதற்கு 107 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும். அதிமுகவுக்கு சபாநாயகரையும் சேர்த்து 110 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால், ஆட்சிக்கு எந்த சிக்கலும் இல்லை.

இன்றைய தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் இந்த வெற்றியை உற்சாகமாக கொண்டாடுகின்றனர். #MLAsDisqualificationCase #18MLAsCaseVerdict
Tags:    

Similar News