search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ADMK celebrates"

    • அ.தி.மு.க 52-ம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் இன்று உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
    • திண்டுக்கல் பஸ்நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    திண்டுக்கல்:

    அ.தி.மு.க 52-ம் ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் இன்று உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். திண்டுக்கல் பஸ்நிலையத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மேற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    மேலும் சிலை முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டி ருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்திற்கும், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு மாநகராட்சி எதிர்கட்சி தலைவர் ராஜ்ேமாகன் தலைமை வகித்தார். பகுதி செயலாளர்கள் மோகன், சேசு, சுப்பிரமணி, முரளிதரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பேரவை செயலாளர் பாரதிமுருகன், எம்.ஜி.ஆர் இைளஞரணி செயலாளர் வி.டி.ராஜன், எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் திவான்பாட்சா, நிர்வாகிகள் நைனார்முகமது, வெங்கிடு, மகளிர்அணி செயலாளர் ஜெயலட்சுமி, வக்கீல் பிரிவு செயலாளர் ெஜயபால், அமைப்புசாரா ஓட்டுனரணி செயலாளர் பிரபுராம், லெனின், கவுன்சிலர் பாஸ்கரன், வக்கீல் பழனிச்சாமி, அண்ணா தொழிற்சங்க செயலாளர் நாராயணன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டது செல்லும் என ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியதை அதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். #MLAsDisqualificationCase #18MLAsCaseVerdict
    சென்னை:

    டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்தது செல்லும் என உயர்நீதிமன்ற மன்றம் உறுதி செய்துள்ளது. சபாநாயகரின் முடிவு தவறு இல்லை என்று கூறிய நீதிபதி சத்தியநாராயணன், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த மனுக்களையும் தள்ளுபடி செய்தார்.

    மேலும், சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவோ, 18 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தவோ தடை இல்லை என்றும் கூறியுள்ளார்.

    ஏற்கனவே திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், தற்போது 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் உறுதி செய்யப்பட்டிருப்பதால் மொத்தம் 20 தொகுதிகள் காலியாகின்றன. 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.



    இந்த தீர்ப்பினையடுத்து, தமிழக சட்டசபையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 234ல் இருந்து 214 ஆக குறைந்துள்ளது. இதில் பெரும்பான்மை பெறுவதற்கு 107 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும். அதிமுகவுக்கு சபாநாயகரையும் சேர்த்து 110 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால், ஆட்சிக்கு எந்த சிக்கலும் இல்லை.

    இன்றைய தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி தலைமைக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் இந்த வெற்றியை உற்சாகமாக கொண்டாடுகின்றனர். #MLAsDisqualificationCase #18MLAsCaseVerdict
    ×